பாரிஜாதம்

கத்தி இல்லை… இரத்தம் இல்லை… அவனைப் போட்டுர்றேன்… அவன் கையை வெட்டு, காலை வெட்டு…. ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்…… டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. இரைச்சல் இல்லை….. முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்…. ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்….

ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது…. சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா…. இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்…. தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்….. சொல்லுவதற்கு முன்பே உயிரை வேறு விட்டு விடுகிறார்….. உண்மை தெரிந்து கதாநாயகன் கதாநாயகியை கைபிடிப்பது என்ற ஒற்றை வரி கதை….. தன் ட்ரீட்மெண்டால் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார் பாக்யராஜ்….

குறிப்பாக ஹீரோயின் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களை தன் மகனாகவும், ஹீராயினாகவும் சீதா கற்பனை செய்து கொள்ள விஷுவல் ட்ரீட்மெண்ட் சூப்பர்…. ஹீரோயின் சரண்யாவைப் பொறுத்தவரை குத்துவிளக்கு மாதிரி இருக்கிறார்…. சினிமாவுக்கு ஏற்றத் தோற்றம் அவருக்கு இல்லை… ஹீரோ பிருத்வி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்….. இருக்காதா பின்னே? எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே?

இடைவேளைக்குப் பிறகே பாக்யராஜ் சம்பூர்ணம் என்ற கேரக்டராக உள்ளே நுழைகிறார் (விசு ஸ்டைல்?)…. பாக்யராஜ் தான் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறாராம்…. பிரகாஷ்ராஜுக்கு ஏற்ற வெயிட் கேரக்டர் இல்லை…. அவருக்கு நடிக்க ஸ்கோப் ரொம்பவும் கம்மியாக இருக்கிறது…. ஹீரோ அப்படியே 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும் பாக்யராஜை இமிடேட் செய்கிறார்….. படம் முழுவதும் இழைக்கப்பட்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை படத்துக்குப் பலம்…..

படத்தின் ஒரிஜினல் கதையை விட ஹீரோயின் (எழுத்தாளராம்) எழுதும் பாரிஜாதம் கதை சூப்பராக இருக்கிறது… அந்தக் கதையின் முடிவு ரொம்பவும் சோகம்….

ரொம்ப நாளுக்குப் பிறகு காதுக்கு இனிமையான பின்னணி இசை…. புதுமுக இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது…. ஒரு பாடல் ரொம்பவும் அருமை…..

பாரிஜாதம் – நன்றாகவே மணக்கிறது….

மறுமொழி இடுக