தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 95 லட்சம் மானியமாக வழங்கப்படுவதைக் கண்டு வயிறு எரிந்து ஆரியபவன் இட்லி சாப்பிடும் சின்ன சோ எஸ்.வி.சேகர் சட்டமன்றத்தில் இதுபோல ராஜாஜி மற்றும் மற்ற பிராமணர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்தால் இந்த அரசு மானியம் வழங்குமா என்று கேணைத்தனமாக கேள்வி கேட்டிருக்கிறார்…. எஸ்.வி.சேகரின் இந்த கன்னிப்பேச்சை அவரது கட்சியின் தலைவரான அம்மாவும் ரொம்பவும் ரசித்து சிலாகித்ததாக அக்ரஹாரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….
இனி திரைப்படங்கள் எப்படியெல்லாம் தயாரிக்கலாம் என அக்ரஹாரத்து தி.மு.க சார்பில் சில வழிகாட்டுதல்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது… என்னென்ன வழிகாட்டுதல்கள் என அறிய முயற்சித்தபோது கபாலீசுவரர் கோயில் வாசலில் குச்சி விற்றுக் கொண்டிருந்தவர் ஒருவர் சில டிப்ஸ்கள் கொடுத்தார்…. இந்த டிப்ஸ்களில் பெரும்பாலானவை அந்த வழிகாட்டுதல்களில் இடம்பெறும் என நம்பப்படுகிறது….
1) இனி எடுக்கப்படும் எல்லாப் படங்களுமே அம்மா படத்துக்கு பூஜை போட்டே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
2) யாருடைய வாழ்க்கை வரலாற்றையாவது படமாக எடுக்க வேண்டுமென்றால் பத்திரிகையாளர் சோ அவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கச் சொல்கிறாரோ அவருடைய வரலாறை தான் படமாக எடுக்க வேண்டும்… சோ அவர்களிடம் ராஜாஜி, அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் புத்தகம் எழுதிய கே.சி. லட்சுமிநாராயணன், தினமலர் பவுண்டர் டி.வி.ராமசுப்பையர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைக்கதை அமைத்து தயராகவே இருக்கிறது.
3) படங்களில் சண்டைக்காட்சிகள் அமைக்க செங்கோட்டையன், சேகர்பாபு போன்றவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்…. ஸ்டண்ட் கலைஞராக கண்டிப்பாக கலைராஜன் நடித்தே ஆகவேண்டும்…. மைக்கினை தலைக்கு மேலே சுற்றி கதாநாயகனை அடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம் பெறவேண்டும்….
4) குரூப் டேன்ஸர்களாக அ.தி.மு.க மகளிர் அணியினர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்…. கவர்ச்சி தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற வாயிலில் சுப்பிரமணிய சாமியை வரவேற்க மகளிர் அணியினர் ஆடிய நடனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்…
5) படங்களுக்கு வசனகர்த்தாவாக முத்தமிழ் வித்தகர் காளிமுத்துவை பயன்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமாக்கப்படும்…. இரட்டை அர்த்த வசனங்கள் தேவைப்பட்டாலும் அவரே எழுதித்தரத் தயாராக இருக்கிறார்…. அவரிடம் “கும்பிடத் தோன்றினால்……. கூப்பிடத் தோன்றினால்” டைப்பில் நிறைய வசனங்கள் கைவசம் தயாராகவே இருக்கிறது…..
6) நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்பட வேண்டும்… அதுவும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருப்பதுபோல மட்டுமே காண்பிக்கப் படவேண்டும்….
7) திரைப்படங்களில் வரும் போலிசார் வில்லன்கள் மீது கஞ்சா கேஸ் மட்டுமே போடவேண்டும்…. இதற்கும் ஒரிஜினல் கஞ்சாவைத் தான் பயன்படுத்த வேண்டும்….
படங்களின் இயக்குனர்களை அம்மாவே முடிவு செய்வார்…. அம்மா சொல்படி தான் படத்தை இயக்க வேண்டும்… தேவைப்பட்டால் ஒரே படத்துக்கு 50 அல்லது 100 இயக்குனர்கள் வரை அம்மாவே மாற்றுவார்….
9) படங்களில் திருமணக் காட்சிகள் அமைக்கப்பட்டால் அந்தக் காட்சி நூறுகோடி ரூபாய் செலவில் தான் அமைக்கப்படவேண்டும்…. அந்தக் காட்சியில் போலிஸ் கமிஷனர் சாம்பார் வாளி தூக்கி பரிமாறுவது போன்ற காட்சி கட்டாயம் இடம் பெற வேண்டும்…
10) இனி எடுக்கப்படும் படங்களுக்கு கதாநாயகர்களே இருக்கக்கூடாது… கதாநாயகிகள் மட்டும் தான் இருக்க வேண்டும்… படத்தில் இடம் பெறும் ஆண் கதாபாத்திரங்கள் கதாநாயகி காலில் குப்புற விழுந்து வணங்க வேண்டும்….
- அக்ரஹாரத்து தி.மு.கவின் வழிகாட்டுதல்கள் தொடரும்
லக்கிலுக் பதிப்பித்தது.